ADDED : ஏப் 24, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
கரூரில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிறப்பாளராக பங்கேற்ற, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி கோரிக்கைகள் குறித்து பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர் உள்பட அனைத்து சமுதாயத்திற்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வன்னியர் இளைஞர் மாநாட்டில் அதிகம் பேர் கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வன்னியர் சங்க மாநில செயலாளர் அய்யாசாமி, பா.ம.க., மாவட்ட தலைவர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.