/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ்சில் மயங்கி விழுந்த போஸ்ட் மேன் பலி
/
பஸ்சில் மயங்கி விழுந்த போஸ்ட் மேன் பலி
ADDED : செப் 30, 2025 12:59 AM
குளித்தலை, ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்த போஸ்ட்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., குண்ணா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 55. இவர் குளித்தலை தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட்மேன் ஆக கடந்த, 21 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். இவருக்கு மனைவி சுமதி, 42, மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
போஸ்ட்மேன் சங்கர் நேற்று முன்தினம் மாலை, 6:15 மணியளவில் தனது சொந்த ஊரான குண்ணா கவுண்டம்பட்டிக்கு சென்று விட்டு, திரும்பி குளித்தலை வருவதற்காக அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது, மைலாடி இரட்டை வாய்க்கால் அருகில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த பஸ் டிரைவர் இடையில் பஸ்சை நிறுத்தாமல், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் நிறுத்தினார்.
பின்னர் பயணிகள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து போஸ்ட்மேன் மனைவி சுமதி, 42, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.