sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு

/

மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு

மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு

மானிய விலையில் பவர் டில்லர்: கலெக்டர் அழைப்பு


ADDED : டிச 14, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 14, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 14-

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக வேளாண் பொறியியல் துறை மூலம், விவசாயி

களுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக, 1.20 லட்சம் ரூபாய், விசைக்களை எடுப்பான்களுக்கு அதிகபட்சமாக, 63 ஆயிரம் ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு, அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில், 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரம் பெற, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவி

பொறியாளர், இளநிலை பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us