/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : டிச 29, 2024 01:03 AM
கரூர், டிச. 29-
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, சனி பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பிறகு, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் சிலைகளுக்கும், மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேக மாலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி, நேற்று, மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
* குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.