/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : ஜூன் 09, 2025 03:41 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மதியம், 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்-டது.* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்த-மேடு
ஈஸ்வரன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி,
நந்தி சிலை மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜை
நடந்தது.