/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : அக் 05, 2025 01:26 AM
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, புரட்டாசி மாத சனி பிரதோஷ விழாவில், திரளானோர் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 முதல், 5:00 மணி வரை பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பிறகு நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் சிலைகளுக்கு தீபாராதனை காட்டிய பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேக மாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி நந்தி சிலைக்கு அபிேஷகம் நடந்தது. மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள், அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சி சுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராவமிதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.