sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு

/

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு


ADDED : ஆக 21, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 21, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, சிலைகள் தயாரிக்கும் பணி, கரூர் அருகே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் சதுர்த்தி நட்சத்திரத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை நடத்தி, மூன்றாம் நாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். அதற்காக, ஐந்து அடி முதல், 15 அடி வரை விநாயகர்கள் சிலைகள் தயாரிக்கும் பணி, ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விடும்.

நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி நாளான வரும் செப்., 9ல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்காக, கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில், 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us