sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவில் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது

/

கோவில் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது

கோவில் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது

கோவில் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது


ADDED : அக் 10, 2024 01:52 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் கடைகளுக்கு சீல் வைக்க

எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது

கரூர், அக். 10-

கரூர் அருகே, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பட்டா உள்ள கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. அதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பால சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீடுகள், கடைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி ஆய்வு செய்து, சீல் வைக்கும் பணிகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வெண்ணைமலை பஸ் ஸ்டாப்பில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பட்டா உள்ள, ஐந்து கடைகளுக்கு திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹரிணி, உதவி ஆணையர் ரமணி காந்தன், கோவில் செயல் அலுவலர் சுகுணா உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதை கண்டித்து, முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ் தலைமையில், பொதுமக்கள் வெண்ணைமலை பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒரு பெண் உள்பட, 13 பேரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us