/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'3.19 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்'
/
'3.19 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்'
'3.19 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்'
'3.19 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்'
ADDED : பிப் 12, 2025 07:18 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 3.19 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் முகாமை தொடங்கி வைத்து பின், கூறியதாவது: தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம், ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. குழந்தைகள், 20 முதல் -30 வயதுடைய பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. தவிர அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளில் நடக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில், 1 முதல் 19 வயதுடைய இரண்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 236 குழந்தைகள், 20--30 வயதுடைய, 80 ஆயிரத்து, 267 பெண்கள் என மொத்தம் மூன்று லட்சத்து,19 ஆயிரத்து, 503 பேருக்கு மாத்திரை வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்கத்தால் ரத்த சோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும், குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதும் அதிகரிக்கிறது. இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணி, மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

