/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : நவ 26, 2024 01:06 AM
மக்கள் குறைதீர் கூட்டத்தில்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர், நவ. 26-
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதில், ஆறு பயனாளிகளுக்கு, 16 லட்சத்து, 53 ஆயிரத்து, 189 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, கலெக்டர் மனுக்களை பெற்றார். பிறகு பொதுமக்கள் அளித்த, 480 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரகாசம், கலால் உதவி ஆணையர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட, பலர் பங்கேற்றனர்.