sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : அக் 24, 2024 01:10 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம்

சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர், அக். 24-

கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. அதை, பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

கரூர் பஞ்சாயத்து யூனியன், மி. பஞ்சமா தேவி கிராம பஞ்சாயத்து அரசு காலனியில், 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக கடந்த, 2013-14 ல், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.

அதன் மூலம், அரசு காலனி பகுதியில் உள்ள, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல் நிலை குடிநீர் தொட்டி தற்போது, சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட்

கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது.

இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியில் பராமரிப்பு பணி செய்ய மேலே ஏறி செல்ல முடியாமல், துாய்மை பணியாளர்கள் சிரமப் படுகின்றனர். இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியை, சீரமைக்க வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, அரசு காலனி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க, மி. பஞ்சமாதேவி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us