sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

/

தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

48


ADDED : ஆக 29, 2025 12:24 PM

Google News

48

ADDED : ஆக 29, 2025 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பீஹாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ராகுல் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்று தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். வெளிநாடு பயணங்களின் போது தமிழகத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை பார்த்துள்ளேன். தற்போதைய பயணம் பற்றி நாளை விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் விளக்கமாக தெரிவிப்பேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us