/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
/
குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ADDED : அக் 12, 2025 03:09 AM
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பில், மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்.
அதன்படி நேற்று நடைபெற்ற முகாமிற்கு டி.எஸ்.ஓ., வைரபெ-ருமாள் தலைமை வகித்தார். தனி தாசில்தார் வெங்கடேஷ், முது-நிலை ஆர்.ஐ.,க்கள் துரைசாமி, விஜய்ஆனந்த் முன்னிலை வகித்-தனர். தொடர்ந்து பொது மக்களிடமிருந்து, ரேஷன் கார்டுகள் சம்-பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அலுவலக இளநிலை உதவியாளர்கள் விக்னேஸ்வரன், யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் துறையினர்கள் பங்கேற்று அரசு திட்-டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்-டது.