/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்
ADDED : அக் 12, 2024 07:25 AM
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவை யொட்டி இன்று தேரோட்ட விழா நடக்கிறது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்-யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்-டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு அக்., 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்-சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 10 மாலை, 4:00 மணிக்கு
திருக்கல்யாண உற்சவம் நடந்தது.புரட்டாசி திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.அதற்காக, அலங்கரிக்கப்பட்ட தேர் கோவில் வளாகத்தில் நிறுத்-தப்பட்டுள்ளது. அதை, நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள்
வணங்கினர். தேரோட்ட விழா மற்றும் நான்காவது சனிக்கிழமை-யையொட்டி, இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,
போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் வரும், 21 ல் முத்து பல்லாக்கு, 22 ல் ஆளும் பல்-லாக்கு, 23ல், வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.