sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தண்டவாளம் சேதம்: போலீசார் விசாரணை

/

தண்டவாளம் சேதம்: போலீசார் விசாரணை

தண்டவாளம் சேதம்: போலீசார் விசாரணை

தண்டவாளம் சேதம்: போலீசார் விசாரணை


ADDED : ஜன 18, 2025 12:34 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று காலை, 11:45 மணிக்கு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், தான்தோன்றிமலை - வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, ரயில் இன்ஜின் முன்பக்கத்தில் சத்தம் கேட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த ரயில் டிரைவர், ரயிலை வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி விட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே ஆய்வு செய்தனர்.

அப்போது, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சிறிது சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது.

பின்னர், தண்டவாளத்தின் மேல்பகுதி சரி செய்யப்பட்டது. வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட, எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்று இன்ஜின் இணைக்கப்பட்டு, நேற்று மதியம், 1:00 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கம்பி வைத்தால், இதுபோன்ற சேதம் ஏற்படும். தொடர் விடுமுறை காரணமாக, சிறுவர்கள் வைத்த இரும்பு துண்டுகளால், தண்டவாளம் சேதம் அடைந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.

சிறுவர்களின் விபரீத விளையாட்டு


அயோத்தி - ராமேஸ்வரம் விரைவு ரயில், விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப்பாதையில் நேற்று வந்து கொண்டிருந்தது. மாலை, 4:45 மணிக்கு, கடலுார் மாவட்டம், பண்ருட்டி ரயில் நிலையத்தை கடந்து திருவதிகை ரயில்வே கிராசிங் அருகே சென்றபோது, சக்கரத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது.உடன், லோகோ பைலட் திருவதிகை ரயில்வே கேட் முன் ரயிலை நிறுத்தி, ரயிலின் முன் சக்கரங்களை ஆய்வு செய்தார்.
அப்போது, 1 ரூபாய் நாணயங்களை சிறுவர்கள் தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் வைத்து சென்றதால், ரயில் சக்கரத்தில் நாணயம் நசுங்கி ஒட்டி கொண்டு, வித்தியாசமான சத்தம் ஏற்பட்டது தெரிய வந்தது.பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி, சக்கரத்தில் ஒட்டியிருந்த 1 ரூபாய் நாணயங்களை அகற்றிய பின், 5:40 மணிக்கு ரயில் பட்டாம்பாக்கத்தில் இருந்து கடலுார் நோக்கி புறப்பட்டது. இதனால், அயோத்தி - ராமேஸ்வரம் விரைவு ரயில், 55 நிமிடங்கள் தாமதமாக சென்றது.








      Dinamalar
      Follow us