/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி
/
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 17, 2024 01:24 AM
ரயில்வே பாலத்தின் தரைத்தளம்
சேதம்:வாகன ஓட்டிகள் அவதி
கரூர், அக். 17-
கரூர் அருகே, ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்,
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு ரயில்வே வழித்தடம், அரிக்காரன்பாளையத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக நாள்தோறும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே பாலத்தில் பல இடங்களில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே பாலத்தில், கான்கிரீட் கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. இதனால், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து, கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்----சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, அரிக்காரன் பாளையம் ரயில்வே பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

