sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு

/

மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு

மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு

மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு


ADDED : ஆக 24, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மழை காரணமாக செடிகளில், பூக்கள் உதிர்ந்து விட்டதால், வரத்து குறைந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளதால், வரத்து குறைந்து விட்டது. இதனால், விலை உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால், தென் மாவட்டங்களின் முக்கிய சந்தையாக உள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அய்யலுார் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்தளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us