/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை
/
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை
ADDED : ஆக 21, 2024 02:56 AM
கரூர்;தமிழகம், கேரளா மாநில பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரி வித்திருந்தது.
ஆனால், கரூர் மாவட்டத்திலும், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று இரவு, 7:30 மணி முதல், 8:00 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெங்க மேடு, திருமாநிலையூர், திருகாம்புலியூர், தான்தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லா ண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது.

