sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்

/

ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்

ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்

ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்


ADDED : பிப் 23, 2024 02:41 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி;ராமர் பாண்டி வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 5 பேரை அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 33.

இவர் கடந்த, 2012ல் பெட்ரோல் குண்டு வீசியதில், 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ராமர் பாண்டி உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, கரூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.கடந்த, 19ல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராமர் பாண்டி, டூவீலரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி அருகே, தடாகோவிலில் ராமர் பாண்டியை வழிமறித்த நபர்கள், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தேடிவந்த, மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த வினோத் கண்ணன், 26, கீரனுார் மகேஷ் குமார், 24, மேலுார் தனுஷ், 21, ஆண்டாள் கொட்டாரம் தர்மா, 25, ரமேஷ், 23, ஆகிய, 5 பேரும் முதுகுளத்துாரில் சரணடைந்தனர். அவர்களை நேற்றிரவு, 8:00 மணிக்கு, அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us