/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
ADDED : பிப் 17, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வல்லம், கொம்பாடிப்பட்டி, வீர-வள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம், வாழைத்தார்கள் சீரான விலையில் விற்பனையா-னது. இதில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்-யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.