/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.400க்கு விற்பனை
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.400க்கு விற்பனை
ADDED : செப் 29, 2025 02:29 AM
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், கொம்பாடிப்பட்டி, வல்லம், பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைத்தார்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, லாலாப்பேட்டையில் செயல்படும் வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.