/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
ADDED : ஜன 27, 2025 03:03 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த, வடசேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, நாவல் நாயக்கன்பட்டி ரெங்கசாமி என்-பவர் வீட்டில் எலக்ட்ரிகல் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்துகொண்-டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்பிரமணியின் மனைவி கனகா, 40, கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.
இந்நிலையில், நேற்று சுப்பிரமணியின் உறவினர்கள், சடலத்தை வாங்க மறுத்து தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், தோகை-மலை, பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பேச்சு-வார்த்தை நடத்தினர். அப்போது, மின் பழுது பார்க்க அழைத்துச்-சென்ற நபரை கைது செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.