sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : மார் 08, 2024 07:14 AM

Google News

ADDED : மார் 08, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, தென்னிலை பஞ்., நல்லாச்சிப்பட்டியில் சுண்ணாம்புகாரன் குளம் உள்ளது. 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளமானது பஞ்., நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் வரும் மழைநீரானது, சுண்ணாம்புகாரன் குளத்தில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய கிணறுகளுக்கும், ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்மட்டத்தை உயத்துவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் தென் பகுதியில் ஒரு கான்கிரீட் வீடு, 3 ஓட்டு வீடு, 3 ஹாஸ்பிஸ்டாஸ் வீடுகள் என மொத்தம் 7 வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். குடியிருப்புகளால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் குளத்திற்கு வராமல் தடுக்கப்பட்டு வந்தது. இதனால், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நல்லாச்சிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மகாமுனி, காத்தான் ஆகியோர் கடந்த, 2000ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் தெரிவித்தும், மூன்று மாதங்களுக்கு மேலாக அகற்றாமல் இருந்து வந்தனர். இதையடுத்து கடவூர் தாசில்தார் இளம்பருதி தலைமையில், குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் (அமீனா) சக்திவேல், தென்னிலை பஞ்., தலைவர் பழனியம்மாள், தென்னிலை வி.ஏ.ஓ., முத்துசாமி ஆகியோர் சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., கண்ணதாசன் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நான்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புக்களை அகற்றி தரைமட்டமாக்கினர்.






      Dinamalar
      Follow us