/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்
/
மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்
ADDED : ஜன 13, 2026 05:33 AM
கரூர்: போகி பண்டிகையை, மாசு இல்லாமல் கொண்-டாட வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழி-தலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை மக்கள் கொண்டாடி வந்துள்-ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்-பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். தற்போது, போகி பண்டிகையின்-போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழை-களால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் போன்ற-வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் ஏற்படும் பொருட்களை எரிக்காமல், பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

