/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சேதமான வி.ஏ.ஓ., அலுவலகம் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : டிச 31, 2025 06:15 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த சின்னையம்பாளையம் பஞ்., அலுவலகம் அருகே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில், ராமநாயக்கனுார், அப்பாநாயக்கனார், பொம்மநா-யக்கனுார், ஈச்சம்பட்டி, களத்துப்பட்டி, வெந்தபட்டி, சந்தரகிரி, கரையாம்பட்டி, காக்காயம்பட்டி, சின்-னையம்பாளையம், ஓனாப்பாறைபட்டி, மூலாநா-யக்கனுார் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொது-மக்கள், இருப்பிடம், வருமானம், பிறப்பு, இறப்பு சான்றுகள், விவசாயம் சார்ந்த சான்றுகள் உள்பட பல்வேறு தேவைகளுக்காக, பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகம், 20 ஆண்டுகளுக்கு முன், பஞ்., அலுவலக கட்டடத்தோடு இணைக்கப்பட்டு கட்-டப்பட்டிருந்தது. இந்த கட்டடம் பழுதானதால், புதிய கட்டடம் கட்டப்பட்டு பஞ்., அலுவலகம் மாற்றப்பட்டது.
ஆனால், பழுதான கட்டடத்திலேயே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் தொடர்ந்து செயல்பட்டு வரு-கிறது.
சிமென்ட் கான்கிரீட்கள் பெயர்ந்து, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான சூழல் ஏற்-பட்டுள்ளது. சேதமான கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

