/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்
/
கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்
கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்
கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்
ADDED : டிச 31, 2025 06:14 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்.,ல் தெற்-குபட்டி, பனையூர், நெய்தலுார் காலனி, நெய்-தலுார், கட்டாணிமேடு, இந்திரா நகர், சின்னப்ப-னையூர் உள்பட, 20க்கும் மேற்பட்ட குக்கிரா-மங்கள் அமைந்துள்ளன.
இந்த கிராமங்களுக்கு சாலை, குடிநீர், தெருவி-ளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதி-களை, நெய்தலுார் பஞ்., நிர்வாகம் அமைத்து கொடுத்துள்ளது. பஞ்., தலைவர்கள் காலம் முடி-வுற்ற பின், தெருவிளக்கு பழுது பார்த்தல், குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் துார்வாரும் பணிகள் அனைத்தும் முற்றிலும் தடைபட்டுள்ளன. இதனால் வடிகால்களில் குப்பைகள் அடைத்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நெய்தலுார் பஞ்., பகுதியை ஆய்வு செய்து, வடிகால்களை துார்வாரி, கழிவுநீர் தேங்-காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

