sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

/

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 02, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில் உயிர்ப்பலி வாங்கி கொண்டிருக்கும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சியில், தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஈரோடு சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளின் மைய தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் உரிமை மாநகராட்சிக்கு உள்ளது. வாங்கல் செல்லும் சாலையில் உள்ள, நாய்கள் கருத்தடை மையம் செயல்படுகிறதா என சந்தேகம் உள்ளது. மாநகராட்சியில் தெரு நாய்களை பிடிக்கவே இல்லை. அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. முன்பெல்லாம் நாய்களை பிடித்து கருத்தடை செய்தனர். அதிகாலையில் நடைபயிற்சி செய்வோரையும் தெருநாய்கள் விட்டு வைப்பதில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us