sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை

/

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை


ADDED : மே 23, 2024 06:47 AM

Google News

ADDED : மே 23, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த க.பரமத்தியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி உள்ளது. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து வெள்ளகோவில் வரை, 40 கி.மீ., துாரம், 2 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு என தனி போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. இதனால் சட்டம், ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுவது கூடுதல் சுமையாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்வோரை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமையகமாக கொண்டு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us