/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை
/
மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை
மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை
மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 05, 2026 07:32 AM
கரூர்: கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில், மரங்கள் முளைத்துள்ளன. இதனால், சுவர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பல்-வேறு கிராம சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தோரணக்கல்பட்டி, ஏமூர், புலியூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. கடந்த, இரண்டு மாதங்களாக பெய்த மழை கார-ணமாக, பெரும்பாலான இடங்களில் மேம்பால சுவர்களில் மரங்கள், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன.
இதனால், மேம்பாலங்களின் சுவர்கள் சேதம-டையும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால சுவர்களில் முளைத்துள்ள மரங்கள் மற்றும் செடி-களை உடனடியாக அகற்ற, நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி-யது அவசியம்.

