ADDED : ஜூலை 21, 2025 07:54 AM
அ நிறம் | அளவு
கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா
கரூர்: தமிழகம் முழுவதும், நேற்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.
அதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பாலசுப்பிரமணிய கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், மூலவர் முருக பெருமானுக்கு, 18 வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.
பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட து. முன்னதாக, கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கும், புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
