/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : பிப் 05, 2026 07:32 AM
குளித்தலை: குளித்தலையில், கடந்த, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், முசிறி பஸ் ஸ்டாண்டிலிருந்து சுங்ககேட் கடம்பர் கோவில் வரையும், சுங்ககேட்டில் இருந்து வதியம் கண்டியூர், வேங்காம்பட்டி வரையிலும், குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து உழவர் சந்தை வழியாக கோட்டைமேடு, பரலி, கருங்காப்பள்ளி, திம்மம்பட்டி, கணக்கபிள்ளையூர் வரையிலும், முசிறியில் இருந்து சுங்ககேட், உழவர்சந்தை புறவழிச்சாலை, ரயில்வே ஸ்டேஷன், பெரிய பாலம் வரையிலும் மினி பஸ் இயக்க வழித்தட, 'பர்மிட்' பெற்றுள்ளனர்.
அவ்வாறு, 'பர்மிட்' பெறும் மினி பஸ்கள், அதற்குண்டான வழித்தடத்தில் இயக்காமல், அரசு பஸ்சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன. விதிமீறி இயக்கப்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து, 'பர்மிட்' பெற்ற வழித்தடங்களில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

