/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை
/
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை
கருப்பம்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை
ADDED : அக் 27, 2024 03:53 AM
கரூர்: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கருப்பம்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகரப் பகுதியில் இருந்து, கருப்பம்பா-ளையம் சுக்காலியூர், செட்டிப்பாளையம், அப்பிபாளையம் உள்-ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர வாக-னங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்து-களும் நடக்கின்றன.இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, கருப்பம்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்ப-டவில்லை. தற்போது, வாகன பெருக்கம் அதிகரித்து விட்டதால், கருப்பம்பாளையம் உள்ளிட்ட, 20 க்கும் மேற்பட்ட கிராமப்பகு-திகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்-சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க கருப்பம்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.