sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது

/

 தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது

 தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது

 தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது

15


UPDATED : டிச 22, 2025 07:28 AM

ADDED : டிச 22, 2025 03:24 AM

Google News

15

UPDATED : டிச 22, 2025 07:28 AM ADDED : டிச 22, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பே, முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவுக்கு கொடியேற்ற வேண்டும்'' என அகல்விளக்கேந்தி வந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பார்க்கச் சென்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை தடுத்ததால் அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் டிச.,3 அன்று கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மேல் முறையீட்டு வழக்கும் விசாரணையில் உள்ளது.

டிச., 3 முதல் திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக 926 போலீசார் வரவழைக்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மலை மீது ஏறிச்செல்லக்கூடிய பெரிய ரத வீதி, பழநி ஆண்டவர் கோயில் சந்திப்பு, மலை படிக்கட்டுகளுக்கு முன்பு பழநி ஆண்டவர் கோயில் அருகே போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டைத் தெரு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிப்போர் வீடுகளுக்கு செல்வதற்குகூட போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். டிச., 3 முதல் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

சந்தனக்கூடு திருவிழா

முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவுக்காக பெரிய ரத வீதி பள்ளிவாசலில் இருந்து மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக சில நாட்களுக்கு முன் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தர்கா நிர்வாகிகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரதிநிதிகள், வருவாய்த்துறையினர், போலீசார் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சந்தனக்கூடு விழா நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். நேற்று முன்தினம் காலை மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முன்னேற்பாடுகள் செய்ய 4 முஸ்லிம்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

அதற்கு மலை அடிவாரத்தில் வசிக்கும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்றிய பின்பே முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவில் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

17 பேர் கைது

நேற்று இரவு பள்ளி வாசலில் இருந்து தர்ஹாவுக்கு சந்தனக்கூடு விழாவுக்கான கொடியை கொண்டு செல்ல இருந்தனர். மதியம் 1:30 மணிக்கு பழநி ஆண்டவர் கோயில் தெருவில் வசிக்கும் பெண்கள் கைக் குழந்தைகளுடன், கோஷமிட்டபடி கையில் அகல் விளக்கு ஏந்தியவாறு பெரியரத வீதி நோக்கி வந்தனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கோஷமிட்டு வந்த 14 பெண்கள் 3 ஆண்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பழநி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போலீசாருடன் எச்.ராஜா கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரை திருநகர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களைப் பார்க்க பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா வந்தார். அவரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்வியன், உதவி கமிஷனர் சசிபிரியா தடுத்து நிறுத்தினர். அவர்களிடம், 'எதற்காக எங்களை தடுக்கிறீர்கள். மண்டபத்திற்குள் இருப்பவர்கள் தேச விரோத குற்றவாளிகளா. பூர்ண சந்திரனை தற்கொலைக்கு துாண்டியதே அதிகாரிகள் செயல்தான். நீதிமன்ற தீர்ப்பை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை. உங்களது மேல் முறையீடு நம்பரே ஆகவில்லை. ஆனால் நீதிபதி உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்ற நீங்களே தடுக்கிறீர்கள். எங்கள் முன்னோர் தீபம் ஏற்றியுள்ளனர். தற்போது நான் மலை மேல் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறேன். என்னை தடுத்து பாருங்கள். பத்து நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தபோது பா.ஜ., நிர்வாகிகளை ஏன் கைது செய்தீர்கள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஸ்டாலினின் முதல்வர் பதவி நிரந்தரம் இல்லை என ஆவேசப்பட்டார். அவரிடம், 'நாங்கள் யாரையும் விரோதமாக நினைக்கவில்லை' என போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார்.
அதற்கு எச்.ராஜா, 'பத்து நாட்களாக மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல ஹிந்துக்களை அனுமதிக்கவில்லை. ஹிந்துக்களுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்ற தடை செய்கிறீர்கள். கந்துாரி நடக்கலாம் என்றால் நான் ஏன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லக்கூடாது. தடை இருக்கும்போது மலைமீது செல்ல மற்றொரு தரப்புக்கு எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்.
கைது செய்து மண்டபத்துக்குள் இருப்போரின் நிலை என்ன. அனைத்து கதவுகள், ஜன்னல்களையும் மூடிவிட்டீர்கள். அவர்களை பார்த்தே ஆக வேண்டும் என ஆவேசமாக கேட்டார். உடனே போலீஸ் துணை கமிஷனர், அலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் பேசி, ராஜாவையும் ஒரு வக்கீலையும் மட்டும் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தார்.








      Dinamalar
      Follow us