/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயங்கி விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி
/
மயங்கி விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி
ADDED : நவ 04, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,  மயங்கி விழுந்து, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.
குளித்தலை அடுத்த கிருஷ்ணாயபுரம் டவுன் பஞ்.,  அரசு பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன், 66. இவர் ரயில்வேயில் பிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தனது வீட்டின் அருகே மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு,  கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார்.இது குறித்து அவரது மனைவி மாலா, 61, கொடுத்த புகார்படி,  மாயனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

