/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
/
ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
ADDED : டிச 14, 2025 08:43 AM
கரூர்: கரூர் மாவட்ட நெல்மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின், 34வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். பின்னர் 2025----28ம் ஆண்-டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக கந்தசாமி, மாவட்ட செயல-ராக வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளராக சம்பத், துணைத்தலைவராக கோவிந்தராஜ், துணை செயலராக சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, 5 முதல், 18 சதவீதம் வரை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகி-யோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்தியாவ-சிய உணவு பொருளான அரிசிக்கு விதிக்கப்படும், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை முற்றிலும் நீக்க வேண்டும். கரூர் ஜவஹர் பஜார் சாலையில், பண்-டிகை மற்றும் விசேஷ நாட்களில் அதிக சத்தத்-துடன் ஒலிபெருக்கியை வைத்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்-வாகம் அனுமதிக்கக் கூடாது. கரூர் நகரின் முக்-கிய பகுதிகளில்,
சாலையின் இரு புறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

