/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று அபாயம்
/
பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று அபாயம்
பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று அபாயம்
பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று அபாயம்
ADDED : டிச 17, 2024 01:51 AM
அரவக்குறிச்சி, டிச. 17-
பள்ளப்பட்டி, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலையில், தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல் லும் சாலையில் பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதன் எதிர்புறம் தனியார் பள்ளியும், அருகே குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
பள்ளி அருகே சாலையின் பக்கவாட்டில், நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் இருக்கும் குப்பையாலும், கழிவு நீரும் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் சாலையை கடந்து செல்வோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.