sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்

/

பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்

பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்

பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்


ADDED : செப் 29, 2025 02:29 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி;அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில், தனியார் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்கள், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் சரியாக கட்டப்படாததால், குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையோரத்தில் தேங்கி காணப்படுகிறது. பள்ளியின் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. முறையாக கட்டப்படாத கால்வாயால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் இதை கவனித்து, கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us