sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்

/

பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்

பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்

பள்ளப்பட்டியில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் தொற்று அபாயம்


ADDED : ஜூன் 11, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டில் சரி செய்யப்படாத குடிநீர் குழாயால் நகராட்சி ஊழியர்களை, பெண் கவுன்சிலர் திட்டியது வைரலாகி வருகிறது.

பள்ளப்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 10வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த வஹிதா பானு உள்ளார். இங்குள்ள சொட்டல் தெருவில், சாக்கடையில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் கலக்கிறது. இதை சரி செய்து தரும்படி, நகராட்சி அதிகாரிகளிடம் வஹிதா பானு பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் செவி சாய்க்காமல், கிடப்பில் போட்டுள்ளனர்.

இது குறித்து கவுன்சிலரிடம், பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், குடிநீர் குழாய்க்கு மேல் டயர் டியூப்பை இழுத்து கட்டி விட்டு, நகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர். குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் இப்பகுதி மக்களுக்கு, தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கவுன்சிலர், 'நகராட்சி அதிகாரிகளை போன் போட்டு திட்டி தீர்க்கும் வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us