sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி

/

ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி

ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி

ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி


ADDED : ஏப் 27, 2025 04:22 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் அரிக்காரன்பாளையம் என்ற இடத்தில், தங்க நாற்கர சாலை அமைக்கும் போது, உயர் மட்ட ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது.

அதன் வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தில் பல இடங்களில் கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதம் அடைந்துள்ளது.இதனால், 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலையின் மையப்பகுதியில், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையை கடந்து நடந்து செல்லும் பொது மக்கள், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நின்று, வாகனங்கள் வருகிறதா என கவனித்து விட்டு செல்கின்றனர்.

ஆனால், ரயில்வே பாலத்தில் சாலையின் மையப்பகுதியில், அமைக்கப்பட்ட சிலாப் கற்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன், சிலாப்கற்கள் உள்ள மையப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து, உடைந்த சிலாப் கற்களை மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us