/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுக்காலியூர் சாலையில் மணல்; அகற்ற நடவடிக்கை தேவை
/
சுக்காலியூர் சாலையில் மணல்; அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : மார் 08, 2024 07:14 AM
கரூர்: கரூர், திருமாநிலையூர் சுக்காலியூர் சாலை வழியாக திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், கரூர் மாநகரத்துக்குள் நுழையாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.
திருமாநிலையூர் முதல் சுக்காலியூர் செல்லாண்டிபாளையம், பண்டுதகாரன்புதுார் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தடுப்புச் சுவர் ஓரம் காற்றின் காரணமாக அதிகளவு மணல் பரவி கிடப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புச் சுவரை ஒட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, தடுப்பு சுவர் பகுதியில் பரவியுள்ள மணலை அகற்ற வேண்டும்.

