ADDED : செப் 23, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வெள்ளியணை அருகே, டாரஸ் லாரியில் மணலை கடத்திய-தாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., சசிகலா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் லிங்கத்துார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாரஸ் லாரியில் நான்கு யூனிட் ஆற்று மணலை கடத்தி, மணல் சலிப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. விசாரணையில், டாரஸ் லாரி உரிமையாளர் மதியழகன், 37, மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி, 51, லாரி டிரைவர்கள் சூர்யா, 33, சண்முகம், 40, ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.