/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முத்தனுார் வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
/
முத்தனுார் வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED : அக் 21, 2024 07:35 AM
கரூர்: நொய்யல் அருகே, முத்தனுார் வருண கணபதி கோவிலில், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதில், மூலவர் விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. பின், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், சேமங்கி, நொய்யல் அத்திப்பாளையம், புன்னம், உப்புபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய்புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள, விநாயகர் கோவில்களிலும், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.