sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு

/

சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு

சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு

சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மல்லிகை மகசூல் பாதிப்பு


ADDED : ஜூலை 27, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மல்லிகை பூக்களில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கணம், எழுதியாம்பட்டி, திருக்காம்புலியூர், தாளியாம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மல்லிகை பூக்கள் சாகுபடிக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மல்லிகை பூக்கள் செடிகளின், மொட்டு பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் பரவி வருவதால், பூக்கள் பூப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளில் குறைவான பூக்களே பூத்து வருகின்றன. மல்லிகை பூக்கள் மகசூல் பாதிப்பு காரணமாக, விவசாயிகளுக்கு வருமானம் குறைந்துள்ளது.

எனவே, விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி விரட்டுதல் குறித்து, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என, பூ விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us