sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு

/

புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு

புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு

புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டடம் திறப்பு


ADDED : அக் 08, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புன்னம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இங்கு, தாட்கோ மூலம் புன்னம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில், 151.31 ச.மீ. பரப்பளவிலும், முதல் தளம், 30.91 ச.மீ. பரப்பளவிலும் என, மொத்தம், 181.22 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், அறிவியல் ஆய்வகமும், பதிவேடுகள் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறையும் அமைந்துள்ளது.

வகுப்பறையில் மாணவர்கள் பாடங்களை சிறந்த முறையில் கற்பிப்பதற்கு ஏதுவாக செராமிக் கிரின் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய கல்வி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக கப்போர்டு அமைத்து தரப்பட்டுள்ளது.

கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திபாலகங்காதரன், தாட்கோ உதவி பொறியாளர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us