/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 31, 2026 06:28 AM
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், வட்டார
போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று நான்-காவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும், பல்வேறு கட்-டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று, நான்காவது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சங்-கரேஸ்வரி உள்பட இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

