/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 31, 2026 06:27 AM

கரூர்: கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று இரண்டாவது நாளாக, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் குடிநீர், கழிப்-பிட வசதியை ஏற்படுத்த வேண்டும். கல்வி தகு-தியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், பதவி உயர்வுக்கான வயது வரம்பை, ஆறு ஆண்டு-களில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் முதல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றனர்.கரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று, இரண்டா-வது நாளாக, மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

