/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டியில், வாழைத்-தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பொய்-கைப்புத்துார், மகாதானபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்கப்படுகி-றது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என விற்பனையானது. உள்ளூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.