/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டிகளில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : டிச 13, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாலாப்பேட்டை மண்டிகளில்
வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், டிச. 13-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, பொய்கைப் புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி, 250 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய் என விற்கப்பட்டது. மழை காரணமாக, விவசாயிகள் மண்டிகளுக்கு குறைந்தளவே வாழைத்தார்களை கொண்டு வந்தனர். இதனால் விற்பனை மந்த கதியில் இருந்தது.