/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.20.85 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
/
ரூ.20.85 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ADDED : அக் 29, 2024 07:04 AM
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 20 லட்சத்து, 85 ஆயிரத்து, 123 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் விவசாயிகள், 7,374
தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 27.65 ரூபாய், அதிகபட்சமாக, 41.89 ரூபாய், சராசரியாக, 38.91 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 2,187 கிலோ எடையுள்ள
தேங்காய்கள், 79 ஆயிரத்து 339 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 359 மூட்டைகளாக விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 12.99 ரூபாய், அதிகபட்சமாக, 126.39 ரூபாய், சராசரியாக, 124.19 ரூபாய், இரண்டாம் தரம்
குறைந்தபட்சமாக, 80.39 ரூபாய், அதிகபட்சமாக, 123.99 ரூபாய், சராசரியாக, 113.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 18,370 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 20 லட்சத்து 5,784 ரூபாய்க்கு விற்பனை
நடைபெற்றது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 20 லட்சத்து, 85 ஆயிரத்து, 123 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.