/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
/
அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
ADDED : மே 26, 2025 04:11 AM
கரூர்: கரூர், ஜாமியா நகர் வழியாக செல்லும் அமரா-வதி பாசன வாய்க்-காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கரூர், பெரிய குளத்துப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஜாமியா நகர் வழியாக, அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது சாக்-கடை வாய்க்காலாக மாறி, செடிகள் அதிகளவில் வளர்ந்துள்-ளன. மண் மேடுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் பரவி, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. துர்-நாற்றம் வீசுவ-தோடு, கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. சுகாதார சீர்-கேட்டை தடுக்க, பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்-களை அகற்ற வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.